பிளஸ்–2 தேர்வு: மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1000 பறக்கும் படை-தேர்வுத்துறை நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 5–ந் தேதி தொடங்கி 31–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் எழுத உள்ளனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேருக்கு 2377 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 16,947 மாணவ–மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். சிறைக் கைதிகள் 77 பேர் புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 4 ஆயிரம் ஆசிரியர்களை கொண்ட 1000 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய தொழில் நுட்ப பாடத்தேர்வின் போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை தேர்வு மையங்களில் ஆய்வு நடத்த உள்ளது.
மார்ச் 19–ல் தொடங்கும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 11,827 பள்ளிகளை சேர்ந்த 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். இதில் தமிழ் வழி மாணவர்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர்.
இந்த தேர்வுக்கு 3298 தேர்வு மையங்களில் 75 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை கண்காணிக்க 5200 பேர் கொண்ட 1300 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 412 பள்ளிகளை சேர்ந்த 24,653 மாணவர்கள், 28,750 மாணவிகள் 144 மையங்களில் எழுதுகின்றனர்.
இதே போல 10–ம் வகுப்பை தேர்வை 578 பள்ளிகளை சேர்ந்த 28,124 மாணவர்கள் 29,230 மாணவிகள் 209 மையங்களில் எழுத உள்ளனர்.
அரசு பொதுத் தேர்வில் எவ்வித முறைகேட்டிற்கும், புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 5–ந் தேதி தொடங்கி 31–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் எழுத உள்ளனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேருக்கு 2377 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 16,947 மாணவ–மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். சிறைக் கைதிகள் 77 பேர் புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 4 ஆயிரம் ஆசிரியர்களை கொண்ட 1000 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய தொழில் நுட்ப பாடத்தேர்வின் போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை தேர்வு மையங்களில் ஆய்வு நடத்த உள்ளது.
மார்ச் 19–ல் தொடங்கும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 11,827 பள்ளிகளை சேர்ந்த 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். இதில் தமிழ் வழி மாணவர்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர்.
இந்த தேர்வுக்கு 3298 தேர்வு மையங்களில் 75 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை கண்காணிக்க 5200 பேர் கொண்ட 1300 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 412 பள்ளிகளை சேர்ந்த 24,653 மாணவர்கள், 28,750 மாணவிகள் 144 மையங்களில் எழுதுகின்றனர்.
இதே போல 10–ம் வகுப்பை தேர்வை 578 பள்ளிகளை சேர்ந்த 28,124 மாணவர்கள் 29,230 மாணவிகள் 209 மையங்களில் எழுத உள்ளனர்.
அரசு பொதுத் தேர்வில் எவ்வித முறைகேட்டிற்கும், புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment