Saturday, July 8, 2017

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 10-ம் தேதி முதல் விநியோகம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஜூலை 10-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அவர்கள் தேர்வெழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியானதும் அவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது நிரந்தர சான்றிதழாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment