பொதுத் தேர்வுக்கு தயாராகும்மாணவர்களுக்கு, அச்சத்தை நீக்கி, தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள, அரசுப்பள்ளிகளில் உளவியல் ஆலோசனைவழங்க, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கஉள்ளது. கல்வியாண்டு, துவக்கத்திலிருந்தே, நுாறுசதவீத தேர்ச்சி மட்டுமே இலக்காக இருக்கவேண்டும் என்பதும், குறைந்த பட்சமாக, 90 சதவீதத்தை கடக்க வேண்டும் எனவும்கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.
இதனால், ஒவ்வொரு கல்வியாண்டிலும், மாணவர்களுக்கு நடத்தப்படும் வழக்கமானதேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, தேர்வு பயம் நீங்குவதில்லை. கடந்த இரண்டாண்டுகளாக, தேர்வில் பாடத்தில் நேரடியான வினாக்கள் இல்லாமல், கருத்தை மையமாகக்கொண்டு வினாக்கள்கேட்கப்படுகின்றன.
இத்தகைய தேர்வினால், மாணவர்களின் மதிப்பெண் குறைந்தாலும், படித்த கல்வி பயனுள்ளதாக இருக்கும். நடப்பாண்டின் ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்களை, வினா-விடை மட்டுமின்றி, கருத்தை மையப்படுத்தி, ஆசிரியர்கள் பாடம் நடத்த துவங்கியுள்ளனர்.
எழுத்துப் பயிற்சி அளிக்கும் தேர்வுகள் பல நடத்தினாலும், மாணவர்கள் தன்னம்பிக்கையில்லாததால், தேர்வறையில் தெரிந்த வினாக்களுக்கும் விடை எழுத முடியாமல் திணறுவதும் உண்டு. இப்பிரச்னைக்குதீர்வாகவே, உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உள்ளனர். இத்தகைய ஆலோசனையால் கடந்த இரண்டாண்டுகளாக, மாணவர்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம்ஏற்பட்டுள்ளதோடு, தேர்ச்சி சதவீதத்திலும் முன்னேற்றம் காண முடிந்தது.
ஆனால், நடப்பாண்டில், அத்தகைய, ஆலோசனைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால், பள்ளிநிர்வாகத்தினரும் அச்சத்தில் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க, ஆசிரியர்கள் தயாராகியுள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர் கூறியதாவது: மாணவர்களை, படிப்பில் மட்டுமின்றி, பழக்கவழக்கத்திலும்,நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. மாணவர்களுக்கும் தேர்வை நன்றாக எதிர்கொள்ள வேண்டும்என்ற ஆர்வம் உள்ளது. ஓராண்டாக தேர்வுக்கு தேவையான பாடங்களை படித்து விட்டனர்.
தற்போது அவர்களுக்கு தேர்வு நேரத்தில் மன அமைதியோடு, எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்என்பதற்கான வழிமுறைகள், தேர்வில் அவர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் குறித்து மாணவர்களிடம்கேட்டறிந்து, ஆலோசனை வழங்குகிறோம்.
உடல்நலத்தோடு தேர்வு எழுதவும் மாணவர்களுக்கு வழிமுறைகளை கூறி வருகிறோம். கடந்தாண்டுகளைவிடவும், இம்முறை தேர்வில் அதிக தேர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment