Tuesday, August 9, 2016

தேசிய கீதத்துக்கு தடை விதித்த பள்ளிக்கு ’சீல்’ வைத்தது அரசு

தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்தஉத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும்,சீல் வைக்கப்பட்டது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளஉத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரில் உள்ளதுஎம்.ஏ. கான்வென்ட் பள்ளி. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக பள்ளி ஆசிரியர்கள்பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி தேசிய கீதத்தை பாடுவதற்கான பயிற்சியைமாணவர்களுக்குஆசிரியர்கள் அளித்தனர்.
பள்ளி மேலாளர் தடை: 
இதற்குபள்ளியின் மேலாளர் ஜியா உல் ஹக் தடை விதித்தார். கடவுள் மற்றும் மதத்தைவிடநாடு மேலானது என்ற தேசிய கீதத்தின் வரிகள்இஸ்லாம் மதத்துக்கு எதிரானது. அதனால் தேசிய கீதத்தை பாடக் கூடாது எனஅவர் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு எதிர்த்துதலைமை ஆசிரியர்எட்டு ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகினர். இது தொடர்பான செய்தி வெளியானதும்பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பள்ளியை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்துமத ரீதியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் நடந்ததாகஜியா கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்நிலையில்இந்தப் பள்ளிஅரசின் எவ்வித அனுமதியையும் பெறாமல்கடந்த, 20 ஆண்டுகளாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துபள்ளிக்கு, &'சீல்&' வைக்கப்பட்டு உள்ளது.
பலத்த பாதுகாப்பு: 
பள்ளியில்படித்து வந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்களைஅருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில்மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள பகுதியில்பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment