மார்ச் மாதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ள, மாணவர்களின் பெயர் விபரங்களை சரிபார்த்து, பிழைகளை திருத்திக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
.
தமிழகத்தில், மார்ச் மாதத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகளுக்கான மாணவர்களின் பெயர் பட்டியல்களை, நேரடியாக அந்தந்த பள்ளிகளே, ஆன்லைன் முறையில், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே பிழைகள் இல்லாமல் சரிபார்க்க அறிவுறுத்தி, அதன் பின், விபரங்களை பதிவேற்றும் செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விபரங்களில், ஏதேனும் பிழைகள் இருப்பின், சரி செய்து கொள்ள கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், மாணவர் பெயர் பட்டியலை திருத்த வேண்டிய பிழைகளை, தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் கூடிய பட்டியலாக தயார் செய்து, இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிழைகள் ஏதும் இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டியலில் பிழைகள் ஏதும் இல்லை என,சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் பெயர்களில் எவ்வித பிழைகளும் இல்லை எனவும், அப்படியிருப்பின் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறோம் எனவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்புதல் கடிதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment