பிளஸ் 2 பொதுத்தேர்வு, நிறைவடைகிறது; மே முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 186 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 240மாணவர்கள்; 12 ஆயிரத்து, 502 மாணவியர் என, 22 ஆயிரத்து, 742 பேர்தேர்வெழுதி வருகின்றனர்; இவர்கள் தவிர, 836 தனித்தேர்வர்களும்தேர்வெழுதுகின்றனர்.
மொழித்தாள் தேர்வுகள் எளிதாக அமைந்திருந்தன. கணக்குப்பதிவியல் பாடமும் கை கொடுத்தது. இதற்கு மாறாக, கணிதம், வேதியியல் தேர்வுகள் கடினமாக இருந்தன. வணிகவியல், புவியியல், வீட்டுப்பாடம் தேர்வுகள் சுலபமாக அமைந்தன.
ஐந்து மதிப்பெண் வினா கடினமாக இருந்ததாக, விலங்கியல் தேர்வு எழுதிய மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். வரலாறு, தாவரவியல் தேர்வு வினாத்தாளும், மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்தது. இயற்பியல் மற்றும் பொருளாதாரம் தேர்வு, நாளை (ஏப்., 1) நடக்கிறது. அத்துடன், பிளஸ் 2 தேர்வு நிறைவடைகிறது.
ரிசல்ட் எப்போது?
விடைத்தாள் திருத்துவதற்கு, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொழித்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்கியது. மற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்துவது, 18ல் துவங்கி, நடைபெற்று வருகிறது.
ஏப்., இரண்டாவது வாரத்துக்கு முன், அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்படும். மதிப்பெண் ஒருங்கிணைப்பு, கம்ப்யூட்டர் வழி சரிபார்ப்பு பணிகளுக்கு பின், மே முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment