Friday, September 2, 2016

பிளஸ் 2 மாணவர்கள் நீக்கப்பட்ட விவகாரம்; சி.இ.ஓ., ஆய்வு

தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்,பிளஸ் 2 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோடு அடுத்ததேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 2 மாணவர் சதீஷ்குமார்கழிப்பிடத்தின் அவலநிலை குறித்துடோல் ப்ரி எண்ணில் புகார் தெரிவித்ததால்கடந்த, 29ம் தேதிபள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். நேற்றுஇம்ரான் என்ற மாணவர்ஒழுங்கு நடவடிக்கை காரணமாகபள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். 
இதுகுறித்துநாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்அப்பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்தார். மேலும்கழிப்பிடம்தண்ணீர் வசதி குறித்து ஆய்வு செய்துமாணவர்களின் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுத்தார். மாணவமாணவியரிடம் வகுப்பறைகளுக்கு சென்று விசாரித்தார். 
அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது: 
பள்ளியின் நலன் காக்கதலைமையாசிரியர் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். 
இருப்பினும்மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுமாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் வருத்தம் தெரிவித்துபடிக்க விரும்பினால்வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment