Wednesday, March 1, 2017

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் நாளில், தேர்வர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களின் புகார் மற்றும் கருத்துக்களை, தேர்வுத் துறைக்கு தெரிவிக்கலாம். இதற்காக, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில், தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 80125 94114, 80125 94115, 80125 94122, 80125 94124 ஆகிய எண்களில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment