Friday, March 27, 2015

இன்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு
பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுடன் பொறியியல் படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடத் தேர்வுகள் முடிவு பெறுகின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடத்தேர்வுகள் பிளஸ் 2 இறுதித் தேர்வான உயிரியல் பாடத் தேர்வுடன் மார்ச் 31-ஆம் தேதி முடிவடைகிறது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக, கடைசியாக நடைபெறும் கணினி அறிவியல் தேர்வு இந்த ஆண்டு முக்கியப் பாடத்தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது.
முக்கியப் பாடத் தேர்வுகள் கணிதத் தேர்வுடன் மார்ச 18-ஆம் தேதி தொடங்கின.வேதியியல் பாடத் தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது.பெரும்பாலான மாணவர்கள் கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்றுக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.இந்தப் பாடத்தில் "ஏ' வரிசை வினாத்தாளில் 10, 22-வது ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கணிதத் தேர்வு எளிமையாகவும், வேதியியல் தேர்வு சற்றுக் கடினமாகவும் இருந்தது.இந்த நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பி.இ.-எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய வேதியியல் தேர்வு காரணமாக குறையும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை இயற்பியல் தேர்வு ஈடு செய்யும் என மாணவர்கள் கருதுகின்றனர்.

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்
சேலம்: மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.
முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்; இதுபோன்ற நிலைமை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும் மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும், பீதியும் அடைந்து உள்ளனர். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன், மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை, கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி, உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம் பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலை இருந்தது. இதனால், பல தனியார் மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?
பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப் பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. அதில் எனது மகளும் பங்கேற்றார். இந்த நிலையில், ஒசூரில் கணிதத் தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகைப்படம் எடுத்து பலருக்கு அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என கடந்த 22-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து முறைகேடு செய்ததாக கல்வித் துறையைச் சேர்ந்த 118 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது. தேசிய அளவில், மாநில அளவில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு தகுதியானவர், தகுதியற்றவர் என்பது ஒரு மதிப்பெண்ணில் முடிவு செய்யப்படுகிறது.மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான கட் -ஆப் மதிப்பெண்ணை விட ஒரு மாணவர் அரை மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தால் அவருக்கு தனியார் கல்லூரிகள் மிகப்பெரிய தொகையை நிர்ணயிக்கின்றன.சமூக வலைதளத்தில் வினாத்தாள் வெளியானதால் நன்றாகப் படித்து தேர்வு எழுதும் மாணவர்களை இது பாதிக்கும். அதனால், கணிதப் பாடத்துக்கு கண்டிப்பாக மறு தேர்வுநடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த எந்தவொரு எண்ணமும் இல்லை எனகல்வித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.
எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த கல்வித் துறை இயக்குநருக்கு உத்தர விட வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையின்படி பிளஸ் 2 தேர்வின் கணிதப் பாடத்துக்கு ஏன் மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கூடாது என வரும் ஏப்ரல்7-ஆம் தேதிக்குள் அரசு வழக்குரைஞர் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள்மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்; இதுபோன்ற நிலைமை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும் மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை,'சஸ்பெண்ட்' செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும்,பீதியும் அடைந்து உள்ளனர். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன், மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை, கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி, உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம் பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலைஇருந்தது. இதனால், பல தனியார் மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Monday, March 9, 2015

பள்ளிகளில் காணாமல் போகும் தொழில்கல்வி பாடப்பிரிவு?
கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக, 81 பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவு மூடுவிழாவை கண்டுள்ளது.
தற்போது, வெறும் 41 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவுஅவலநிலையில் செயல்பட்டு வருகின்றது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையில், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, நான்கு சதவீதம் பொறியியல் கல்லுாரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லுாரிகளில் 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டபோது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும்போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என, தொழில்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில்கல்வி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பாமை, 35 ஆண்டுகளாகதொழில்நுட்பத்திற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காததன் காரணமாகவே, தொழில்கல்வி பாடப்பிரிவு முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 122 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 23 அரசு மேல்நிலை மற்றும், 18 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மேல்நிலை தொழில்கல்வி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில், தற்போது, 36 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும், ஓய்வுபெறும் நிலையில் உள்ளதால், விரைவில், தொழில்கல்விபாடப்பிரிவு எந்த பள்ளிகளிலும் இல்லாத சூழல் ஏற்படும். மத்திய அரசு, தொழில்கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், மாநில அரசு அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என தோன்றுகிறது "என்றார்.
பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, தேர்வு மைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். முதல் நாள் தேர்வின்போது, இந்த மையத்தில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு எழுதினார். இந்த மாணவியிடம் தேர்வு அறைக் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஜாம்சன் சில்மிஷம் செய்தாராம். இதுகுறித்து, அந்த மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி திங்கள்கிழமைக்குள் (மார்ச் 9) அறிக்கை தருமாறு முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புகார் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியாற்றிய அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் அவரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புகார் குறித்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ஜேக்கப் அருள்மாணிக்கம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது புகாருக்குள்ளான ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் அவர் மீது கல்வித் துறை சார்பில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Saturday, March 7, 2015

ஸ்ரீரங்கம் குறித்து கேள்வி: காதுகேளாதோருக்கு சிறப்பு வினா
பிளஸ் 2 தேர்வு தமிழ் இரண்டாம் தாளில், ஸ்ரீரங்கம் குறித்து ஒரு மதிப்பெண்ணில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. காது கேளாத மாணவர்களுக்கு மட்டும், ஒரு கேள்வி தனியாக இடம் பெற்றிருந்தது.
அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, தமிழ் வழியில் கற்றவர்களுக்கு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. தமிழ் இரண்டாம் தாளை பொறுத்தவரை, மொத்தம், 80 மதிப்பெண்களுக்கு, எட்டு பிரிவுகளில், 32 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில், பத்து, இருபது வரிகள் மற்றும் ஒரு பக்கம் எழுதுதல், உவமை, உருவகம், எதுகை - மோனை, கற்பனைக் கட்டுரை போன்ற வகைகளில், கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில், 'ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது' என்ற கேள்விக்கு, வடமொழிச் சொற் கலப்பை நீக்க எழுத குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோல், சொந்த வீடு கட்ட கடன் வாங்கி அல்லற்பட்ட, இரண்டு பேர் சந்தித்து உரையாடுவதைக் கற்பனைக் கட்டுரை எழுதும் கேள்வியும் இடம் பிடித்தது. மேலும், ஆங்கிலப் பழமொழிகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் கேள்வி, காதுகேளாத மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மொழி பெயர்ப்புக்குப் பதில், தனியாக கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை தரப்பட்டு, அதிலிருந்து கேள்வி கள் கேட்கப்பட்டிருந்தன.

Thursday, March 5, 2015

பொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...
தேர்வுக்கு கொடுக்கப்படும் பலவிதமான ஆலோசனைகளையும், அடுக்கடுக்கான அறிவுரைகளையும் பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் வரலாம்.
நாம் என்ன போர்க்களத்திற்கா செல்கிறோம்? நமக்கென்ன உயிரா போகப்போகிறது? என்று அவர்கள் சலித்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் ஒருவகையில் போர்க்களம் போன்றதுதான்.
அங்கே நமது உயிரெல்லாம் போகாது. ஆனால், பலருக்கு, நினைத்த வாழ்க்கைப் போய்விடுகிறது. தேர்வில் மதிப்பெண் குறைவதின் மூலம், நினைத்த உயர்கல்விக்கு செல்ல முடியாமல், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்வில் தங்களின் பிடிப்பையே இழக்கிறார்கள்.
மருத்துவம், பொறியியல் மற்றும் வேறுசில துறை படிப்புகளுக்கு மட்டுமல்ல, இன்றைய நிலையில், எந்த துறையை எடுத்துப் படிக்க வேண்டுமானாலும், (அதாவது இந்தியாவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறை மற்றும் உலகளவில் அதிகளவு பணி வாய்ப்பைக் கொண்டுள்ள துறைகள்) விரும்பிய கல்லூரிகளில் சேர வேண்டுமெனில், மதிப்பெண்ணே அடிப்படை தகுதியாக இருக்கிறது.
ஒரு மாணவர், எந்தளவிற்கு திறமை வாய்ந்தவர் என்பதையெல்லாம், விரிவான முறையில் ஆய்வுசெய்யும் வகையில், நமது பள்ளிக் கல்விமுறை கிடையாது. மதிப்பெண் மட்டுமே அறிவு மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கான ஒரு அளவீடாக உள்ளது.
இன்றைய நிலையில், தேர்வில் முதல் மதிப்பெண் அல்லது அதிக மதிப்பெண் வாங்க வைப்பதென்பது, பெரும் வணிக நடவடிக்கையாகவே மாறிவிட்டது. களத்தில் நிற்கும் பல தனியார் பள்ளிகள், தங்களின் மாணவர்களை, மாநில முதல் மதிப்பெண் பெற வைப்பதற்கு, பல்வேறான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. (அவற்றில் சில சட்டவிரோதமானவை என்ற புகார்களும் உண்டு).
நாம், அம்மாதிரி பள்ளிகளுடன் போட்டிப்போட வேண்டியதில்லை. நம் அளவிற்கு சிறப்பாக படித்து, சரியான முறையில் தேர்வெழுதி, முடிந்தளவிற்கு அதிக மதிப்பெண் பெறுவோம். நமது மதிப்பெண் மாநில அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது மாவட்ட அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது பள்ளியளவில் முதல் மதிப்பெண்ணாகவோ அமையலாம்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை விட, பிளஸ் 2 மதிப்பெண், பல விஷயங்களுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. முன்பெல்லாம், கலை-அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் பட்டப் படிப்பில், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், விலங்கியல், தாவரவியல், உளவியல் உள்ளிட்ட பல படிப்புகளில் சேர, அந்தளவிற்கு அதிகப் போட்டி இருக்காது. மேற்கண்ட பல படிப்புகளில், மாணவர்கள் போதிய அளவு சேராமல், காலியிடங்கள் எஞ்சியிருக்கும். எனவே, ஒருவர் கேட்டவுடன் சீட் கிடைக்கும்.
ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதோடுமட்டுமின்றி, பொறியியல், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு, முன்புபோல, மாணவர்கள் முட்டி மோதுவதில்லை. எனவே, கலை - அறிவியல் கல்லூரிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது.
கலை - அறிவியல் கல்லூரிகளில், இடங்கள் நிரம்பாமல், காலியாக இருந்த துறைகளுக்கு, இப்போது கடும் போட்டி. மதிப்பெண் குறைவாக இருக்கும் மாணவர்கள் கூட, அதிக நன்கொடை கொடுத்து சேர்வதற்கு தயாராக உள்ளனர்.
உயர்கல்வியின் நிலை இப்படி மாறிவிட்ட சூழலில், பொதுவாக, மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மாணவர்களை சேர்க்கும் ஒரு நடைமுறையில், நமது மதிப்பெண் குறைந்தால், நாம் எந்த நிலைக்கு ஆளாவோம் என்பதை சற்று யோசித்துப் பார்க்கவும்.
இந்திய கல்வித் திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற போராட்டம் ஒருபுறம் இருக்கட்டும். அது, இப்போதைக்கு நடக்காத காரியம். எனவே, விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதன்மூலம், அரசு பொதுத்தேர்வுகள் என்பவை, உண்மையான போர்க்களமாக இல்லை என்றாலும், அதை எதிர்கொள்ள, போர்வீரன் போன்று தயாராக வேண்டியது அவசியமாகிறது.
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்.....
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
• படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.
• பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
• உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது.
• நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத் தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள்.
• படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.
• குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது.
• இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.
பத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்கான வழிகள்
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால், நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் (Increase your confidence level). இதற்குத் தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிப் போடுங்கள்.
ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றிபெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப் பாடம் கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கிறது.
‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும். சில பாடங்கள் பலமுறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் பல பேர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி
மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி. நன்றாகப் படித்தேன், ஆனால் தேர்வு அறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது. பாடத்தில் ஆர்வமின்மையை இது காட்டுகிறது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறந்துபோகிறது. சினிமா பாடல் கேட்கும்போது கவனத்துடன் கேட்கின்றனர். கவனமாகப் பாடல் கேட்கும்போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும்போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, டிவி பார்த்துகொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதனால் கவனம் சிதறடிக்கப்பட்டு படிப்பது முழுமையாகப் மனத்தில் பதிவதில்லை. அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்பதில்லை.
மறதியைப் போக்க
கவனமாகப் படியுங்கள். படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டிவி பார்க்காதீர்கள். இரவுப் படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள். அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதிப் பாருங்கள். ஆர்வமாகப் படித்தால் எதுவும் மறக்காது
நாம் நமக்காகப் படிக்கிறோம்
நாம் ஏன், எதற்குப் படிக்கிறோம் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்காகவோ படித்தால், நிச்சயம் மறக்கத்தான் செய்யும். நீங்கள் உங்களுக்காகப் படிக்கிறீர்கள். நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாகப்போகும். இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே, நான் படிப்பது என்னுடைய நலனுக்காகத்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும்.
சினிமா பாட்டு கேட்கும்போது உள்ள கவனம், படிப்பதில் குறைவாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம், படிப்பில் இல்லாமல் போகிறது. நம்முடைய நேரத்தை, நம்மை வளர்த்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதாலும், கிரிக்கெட் பார்ப்பதாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர். மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவழியுங்கள் (படியுங்கள்).
கடின உழைப்பு
1. படிப்பதற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். நமது படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளிக்கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை... எனவே நான் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களைக் குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்கக் கூடாது, நாம் எந்தப் பள்ளியில் படித்தாலும் கவனமாக கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும்.
2. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்துக்குச் செல்ல வேண்டும்.
3. படிப்பதை தள்ளிப்போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளிப் போடாதீர்கள். இப்படி தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். நம் வாழ்க்கையும் வீணாகிவிடும்.
4. குறிப்பிட்ட பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்திப் படிப்பது தேவையான ஒன்று. ப்ளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேருவதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதேபோல், மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே, குறிபிட்ட பாடங்களில் அதிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.
தேர்வு எழுதும் முன்...
தேர்வுக்கு முன்னதாக நாம் பாடங்களைப் படிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்:
1. படிக்கும் முறை
பொதுவாக நாம் தேர்வுக்காகப் படிக்கும்போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்குப் போகாமல், அதுவரை படித்ததைப் பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல்
எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்குப் படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். (Time table போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்புக்காகச் செலவு செய்ய வேண்டும். இதில் 10 மணி நேரத்தை படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தை படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்தவும் (Revise செய்ய) பயன்படுத்த வேண்டும். அதேபோல், நாம் படிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த பயன்படுத்த வேண்டும்.
3. சுய பரிசோதனை (Check list)
ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால்தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்கவேண்டி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். திட்டமிடும்போது வாரத்தில் 6 நாள்களுக்குத்தான் நாம் படிப்பதற்குத் திட்டமிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிக்க ஒதுக்க வேண்டும். தேர்வுக்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திக்கொள்ள வேன்டும். புதிதாக எதையும் படிக்காமல் அதுவரை படித்ததை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே, நாம் திட்டமிடும்போது தேர்வுக்கு 2 அல்லது 3 வாரத்துக்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்துவிடும்படியாகத் திட்டமிட வேண்டும்.
4. நம்பிகையுடன் படிக்க வேண்டும்
படிக்கும்போது, இந்தப் பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். பாடம் கடினமாக உள்ளதே, எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக்கூடாது. Negative thoughts இருக்கக்கூடாது. படிக்கும்போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் நாம் பாடத்தை Revise பண்ணுவதற்கு எளிதாக இருக்கும். படிக்கும்போது பாட்டு கேட்பது, டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்திப் படிக்க வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளே பேனா, பென்சில், ரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்ல வேண்டும்.
தேர்வு எழுதும் போது...
தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும். நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும். நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால், தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டை விட்டுவிடுவோம். எனவே நமது நம்பிக்கையைப் பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாகப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் மேஜையின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்துவிடுங்கள். அழிக்க முடியவில்லை எனில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
2. கேள்வித்தாள் வந்ததும் கவனமாகப் படிக்கவும். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கேள்விதாளைப் படிக்கவும். நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்வித்தாளை கவனமாகப் படிக்கவும்.
3. நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள். பிறகு ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள். தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம். எந்தக் கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.
4. பக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Point by Points). முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள்.\
5. சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்துக்குள் எழுதுங்கள். தேவைப்படும்போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
6. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவை பயன்படுத்துங்கள்.
7. பொதுவாக, முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தைப் பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
8. ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம்.
9. விடைத்தாளை அதிகாரியிடம் சரப்பிக்கும் முன், கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
10. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால், விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்த பிறகு...
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டுக்குச் செல்லவும். நண்பர்களுடன் வினா விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டி, நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். அது நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும் அத்துடன், அடுத்த தேர்வுக்கு நாம் ஆயத்தமாவதை பாதிக்கும்.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளைத் தங்களுடைய பிள்ளைகள் பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மாணவர்கள் வயது குறைந்தவர்கள். பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளைப் பெற்றோர்கள் படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிக்கிறார்களா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதிக் காண்பிக்கச் சொல்ல வேண்டும். படிப்பை தவிர மற்ற விஷயங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
1. டிவி பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள். கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2. பிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.
4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும். பிள்ளைகளைத் திட்டாதீர்கள். அன்பாகச் சொல்லி, அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டவும்.
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதைக் கண்கானியுங்கள். அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாகச் சொல்லுங்கள். திட்டமிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
7. உடன் படிக்கும் மாணவ, மாணவியருடனோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பிற மாணவர்களுடனோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
8. உங்கள் வீட்டு பொருளாதாரச் சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.
பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
«தேர்வு பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் பறக்கும்படை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து பார்வையிடுவதை தவிர்த்து வெவ்வேறு தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து பார்வையிட ஏதுவாக முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கும் தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒரு நிலையான பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேறக்கும்படையினர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவரை கையும் களவுமாக பிடிக்கும்போது தேர்வரிடம் இருந்து கைப்பற்றிய விடைத்தாள், ஏனைய ஆவணங்களில் சம்பந்தப்பட்ட தேர்வராலேயே அவரது பதிவு எண்ணை குறிப்பிடச்செய்து அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையை எழுதி முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பறக்கும்படையினர் முதலில் செல்லும் மையத்தில் வினாத்தாள் கட்டு பிரிக்கும்போதும், கடைசியாக செல்லும் மையத்தில் விடைத்தாள் கட்டு கட்டும்போதும் உடனிருக்க வேண்டும். பேறக்கும்படையினர் தேர்வு மையங்களில் தேர்வர்கள் அச்சமுறும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. தேர்வர்களின் மனநிலை, உடல் நிலை, தேர்வு நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
சேந்தேகத்திற்குரிய தேர்வர்களை மட்டும் சோதித்தால் போதும். அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும்.பேறக்கும்படையினர் தேர்வு அறைகள் மட்டுமின்றி அறையின் வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதிகளை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம்
பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க, தேர்வு அறையில், கண்காணிப்பாளர்களுக்கு நாற்காலி போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திஉள்ளனர்.
'மூன்று மணி நேரம் நின்று கொண்டே இருப்பது இயலாத காரியம். சர்க்கரை நோய் பாதித்தோர் சில நிமிடங்களுக்கு மேல் நின்றால் மயங்கி விடுவர். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் வியர்த்து அழுத்தம் அதிகமாகும். இதயப் பிரச்னை உள்ளவர்களும் சோர்வாகி விடுவர்' என, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் ஜனார்த்தனன் கூறும் போது, ''நாற்காலி போடுவதா, வேண்டாமா என்பதை, ஆசிரியர்களின் வயது மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தேர்வு அறையில், தவறுகள் தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககத்தில் விசாரித்த போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, நாற்காலி தொடர்பாக, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'நாற்காலி போட வேண்டாம் என்பதை ஆசிரியர்களின் வயது, உடல்நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நாற்காலி தர வேண்டும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை
நாகர்கோவில்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: «தேர்வு பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் பறக்கும்படை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து பார்வையிடுவதை தவிர்த்து வெவ்வேறு தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து பார்வையிட ஏதுவாக முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கும் தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒரு நிலையான பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேறக்கும்படையினர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவரை கையும் களவுமாக பிடிக்கும்போது தேர்வரிடம் இருந்து கைப்பற்றிய விடைத்தாள், ஏனைய ஆவணங்களில் சம்பந்தப்பட்ட தேர்வராலேயே அவரது பதிவு எண்ணை குறிப்பிடச்செய்து அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையை எழுதி முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பறக்கும்படையினர் முதலில் செல்லும் மையத்தில் வினாத்தாள் கட்டு பிரிக்கும்போதும், கடைசியாக செல்லும் மையத்தில் விடைத்தாள் கட்டு கட்டும்போதும் உடனிருக்க வேண்டும். பேறக்கும்படையினர் தேர்வு மையங்களில் தேர்வர்கள் அச்சமுறும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. தேர்வர்களின் மனநிலை, உடல் நிலை, தேர்வு நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
சேந்தேகத்திற்குரிய தேர்வர்களை மட்டும் சோதித்தால் போதும். அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும்.பேறக்கும்படையினர் தேர்வு அறைகள் மட்டுமின்றி அறையின் வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதிகளை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Monday, March 2, 2015

காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை பிளஸ் 2தேர்வில் புதிய நடைமுறைகள் : வரிசை எண் மாற்றப்பட்டு 2 வித வினாத்தாள்கள்
பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்&2 அரசுப் பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு, கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியது:
பிளஸ் 2 தேர்வில் நடப்பாண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் தற்காலிக மதிப் பெண் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் நடப்பாண்டு முதல் தேர்வு மையத்தில் மாணவர்கள் ஏ&பி முறையில் அடுத்தடுத்து உட்கார வைக்கப்படுவார்கள்.
இதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 6 பாடங்களுக்கான வினாத்தாள்களில் ஏ மற்றும் பி வரிசை குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில் பகுதி&1ல் ஒரு மதிப்பெண் வினாக்கள் வெவ்வேறு வரிசையில், வினா எண்களின் வரிசை மாறுபட்டிருக்கும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன்படி முன்பின் அமர்ந்துள்ள மாணவர்களுக்கும் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள மாணவர்களுக்கும் ஒரே வரிசைகொண்ட வினாத்தாள் வழங்குவதை தவிர்க்கும் பொருட்டு முன், பின்னாக ஒவ்வொரு வரிசையிலும் 5 மாணவர்கள் என அறைக்கு 20பேர் அமருகிற வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளதால், தேர்வு மையங்களில் பணிபுரிவோர் எந்த ஒழுங்கீன செயல்களுக்கும் துணை போகாமல் இருக்கவேண்டும். பறக்கும் படையினர் துரிதமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு, தேர்வுக்கு இடையூறின்றி பணியாற்றவேண்டும்.
இவ்வாறு லதா பேசினார்.
இந்த கூட்டத்தில் தேர்வு மையங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர், ரூட் அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது
கோவை கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கானசெய் முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன்படி பள்ளிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.
‘ஏ‘ பிரிவில் இடம் பெற்றிருந்த பள்ளிகளுக்கு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலும், ‘பி‘ பிரிவில் இடம் பெற்றிருந்த பள்ளிகளுக்கு பிப்ரவரி 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் 245 மையங்களில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 8 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இது போல் பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவுபெற்றது. பின்னர் செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலிடப்பட்டு, அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது. இந்த பணியானது கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 10 ஆசி ரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை : பிளஸ் 2 தேர்வில் புதிய நடைமுறைகள்
பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு, கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியது: பிளஸ் 2 தேர்வில் நடப்பாண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் தற்காலிக மதிப் பெண் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் நடப்பாண்டு முதல் தேர்வு மையத்தில் மாணவர்கள் ‘ஏ-பி‘ முறையில் அடுத்தடுத்து உட்கார வைக்கப்படுவார்கள்.
இதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 6 பாடங்களுக்கான வினாத்தாள்களில் ஏ மற்றும் பி வரிசை குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில் பகுதி-1ல் ஒரு மதிப்பெண் வினாக்கள் வெவ்வேறு வரிசையில், வினா எண்களின் வரிசை மாறுபட்டிருக்கும் வகை யில் அச்சிடப்பட்டிருக்கும். இதன்படி முன்பின் அமர்ந்துள்ள மாணவர்களுக்கும் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள மாணவர்களுக்கும் ஒரே வரிசைகொண்ட வினாத்தாள் வழங்குவதை தவிர்க்கும் பொருட்டு முன், பின்னாக ஒவ்வொரு வரிசையிலும் 5 மாணவர்கள் என அறைக்கு 20பேர் அமருகிற வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளதால், தேர்வு மையங்களில் பணிபுரிவோர் எந்த ஒழுங்கீன செயல்களுக்கும் துணை போகாமல் இருக்கவேண்டும். பறக்கும் படையினர் துரிதமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு, தேர்வுக்கு இடையூறின்றி பணியாற்றவேண்டும். இவ்வாறு லதா பேசினார். இந்த கூட்டத்தில் தேர்வு மையங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர், ரூட் அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிளஸ்2 தேர்வு கண்காணிப்பு பணி: குலுக்கல் முறை ஒதுக்கீட்டுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மார்ச் 5-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மையங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அறைக் கண்காணிப்பாளராக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக புதிய நடைமுறையின்படி குலுக்கல் முறையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த ஆண்டு வரை, விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது குலுக்கல் முறையில் தொலைதூரப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அறிந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செல்வராஜ் கூறியது:
குலுக்கல் முறையில் சில ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் உள்ள பள்ளிகள் கிடைத்தால், அதனை மாற்றிக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
கடந்த தேர்வு வரை, சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், குறிப்பிட்ட ஆசிரியர்களை தங்கள் பள்ளி கண்காணிப்புப் பணிக்கு அழைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலேயே, நிகழாண்டு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படிக்கும்போது தூக்கம் வந்தால் என்னசெய்வது?
பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் பரபரப்பாக தயாராகி வரும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா? தேர்வுக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்..?
டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் தருகிறார் ஹெல்த் டிப்ஸ்...
* அரிசி, சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இதனை அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் மீடியமாக சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் உடலுக்கு சீரான ஆற்றல் கிடைக்கும்.
* படிக்கிறபோது கூடவே முறுக்கு, தட்டை போன்ற நொறுக்குத் தீனியை சிலர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால், தூக்கம்தான் வரும். எனவே, நொறுக்குத் தீனிக்கு ஒரு மாதத்திற்கு 'நோ' சொல்லுங்கள்.
* ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அதிக கொழுப்பை உருவாக்கும் ஆயில் உணவுகள் அதிக தூக்கத்தை கொடுக்கும். உடல் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை ஹோட்டலில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால் இட்லி, இடியாப்பம் போன்ற அவித்த உணவுகளைச் சாப்பிடலாம்.
* காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது காபி... பிறகு காலை உணவு. தேர்வு சமயத்தில், சீக்கிரமே சிலர் காலை உணவைச் சாப்பிட்டு விடுவார்கள். தேர்வறையில் பசி ஏற்படலாம். அது கவனத்தை திசை திருப்பக்கூடும். எனவே, வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பும்போது வாழைப்பழம், ஆப்பிள் என ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். தேர்வு அறைக்கு செல்லும்முன் 9.30 வாக்கில் இதனை சாப்பிடலாம். இதனால், அதிக எனர்ஜி கிடைக்கும். உற்சாகத்துடன் தேர்வெழுத முடியும்.
* மதிய உணவாக அரை கப் அரிசியுடன் கொஞ்சம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை புறக்கணித்துவிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எளிதாக செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
* மாலை 4 மணிக்கு பால், கொஞ்சம் பிஸ்கட் எடுத்துக் கொள்ளலாம். 7 முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும். இதிலும் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.
* சிலர் இரவு விழித்திருந்து படிப்பதால் அதிகம் காபி குடிப்பார்கள். இது வேண்டாம். ஒரு நாளைக்கு 3 முறை காபி குடித்தால் போதும். அதிகளவு காபி குடிப்பதால் பசி எடுக்காமல் போய்விடும். மேலும், உடலின் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும்.
சரி...படிக்கும்போது தூக்கம் வந்தால் என்னசெய்வது?
கொஞ்சம் பழங்கள் சாப்பிடலாம், அல்லது வெந்நீர் குடிக்கலாம். இது தூக்கத்தை போக்கி சுறுசுறுப்பைத் தரும்.
அதற்காக இரவு 2 மணிவரை எல்லாம், படிக்கக் கூடாது. ஏனெனில், உடலில் சோர்வு ஏற்பட்டு தேர்வு அறையில் தூக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகவே 8 மணி நேர தூக்கம் ரொம்ப முக்கியம்!
தேர்வு நேரத்தில் கண்கள் பத்திரம் !!
இரவு பகல் பாராமல் படித்துக்கொண்டிருப்பீர்கள். நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பும், ஆர்வமும் தப்பில்லை. ஆனால் கண்களின் தேவையை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். கண்களுக்கு பாதிப்பில்லாமல் படிக்க சில வழிமுறைகள்...
* பார்வையில் இயல்புக்கு மாறாக ஏதேனும் பிரச்னை இருந்தால் தேர்வுக்கு முன்பாகவே மருத்துவரைப் பார்த்து பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
* உடம்பை நன்றாகத் தளர்த்தி சாய்ந்து உட்கார்ந்து படிப்பது நல்லது. புத்தகம் உங்கள் விழிக்கு நேராக இருக்க வேண்டும். கழுத்தைத் திருப்பி சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல.
* கண்கள் கூசும் அளவுக்கு வெளிச்சத்திலும் படிக்கக்கூடாது. குறைந்த வெளிச்சத்தில் படிப்பதும் நல்லதல்ல. இரண்டுமே கண்களைச் சோர்வடையச் செய்யும். படிக்கும்போது உங்கள் முகத்தில் வெளிச்சம் விழுவது நல்லதல்ல. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் வெளிச்சம் விழும்படியாக அமர்ந்து படிக்க வேண்டும். உங்கள் நிழல், நீங்கள் படிக்கும் புத்தகத்தின் மீது படிந்து மறைக்கவும் கூடாது.
* படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. தரையிலோ, நாற்காலியிலோ அமர்ந்துகொண்டு படிப்பதே சரியானது.
* ஒரே இடத்தை அல்லது புத்தகத்தின் ஒரே பக்கத்தை தொடர்ந்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். அப்படி பார்ப்பதால் கண்களில் இருக்கும் மென்மையான தசைகள், நரம்புகளுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் போகலாம். மேலும் கண்ணீர்ச் சுரப்பிகள் வறண்டு போகவும் வாய்ப்புண்டு.
* புத்தகத்துக்கும் உங்களுக்கும் குறைந்தது ஆறில் இருந்து எட்டு அங்குலம் இடைவெளி இருக்கவேண்டும். அப்படி படிப்பதில் சிரமம் ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் காண்பித்து தீர்வு தேடலாம்.
* 20:20:20. இதுதான் கண்களைப் பாதுகாக்கும் சூத்திரம். தொடர்ந்து படிக்க நேர்ந்தால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தலையை உயர்த்தி 20 நொடிகளுக்கு கண்களை மூடி மூடித் திறந்து கண்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். அதேபோல், 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடி நேரத்துக்கு பார்க்கவேண்டும். கண்கள் உலர்ந்து போகாமலும், களைப்படையாமலும் இருப்பதற்கு ஏற்ற பயிற்சி இது.
* ஓய்வில்லாமல் படிக்கும்போது கண்களில் சோர்வு ஏற்பட்டாலோ, கண்கள் கலங்கினாலோ சுத்தமான, குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம்.
* தூக்கம் வரும்போது, சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல. உறங்கி எழுந்து படித்துப் பாருங்கள், உற்சாகத்தை நீங்களே உணர்வீர்கள்.
* தினமும் சிறிது நேரம் வெளியில் சென்று விளையாடுங்கள். அல்லது பசுமையான சூழலில் நடைப்பயிற்சியாவது செய்யுங்கள். மனதிற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அது நல்லது.
* கண்களில் அடிபட்டாலோ, தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ, ‘தேர்வு நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ என்று பயந்து கலவரப்படாதீர்கள். கண் மருத்துவரை அணுகுங்கள். உடனடியாக சரி செய்ய மருந்துகள் உண்டு. உங்கள் விருப்பத்துக்கு மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்கிப் போடுவது பேராபத்தில் முடியலாம்.