Thursday, December 31, 2015

மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்

திக்க வேண்டும் என்ற ஆர்வம்மாணவமாணவியருக்கு வரவேண்டும்படிப்பை நேசிக்க வேண்டும்எனதமிழக ஏ.டி.ஜி.பி.,சைலேந்திர பாபு பேசினார்.

Wednesday, December 30, 2015

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

Thursday, December 24, 2015

பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் தக்க வைக்க முயற்சி

ஈரோடு: பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில்,மாநிலத்தில் முதலிடம் பிடிக்கஈரோடு மாவட்ட கல்வித்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில்மாநிலத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவேஈரோடு மாவட்ட கல்வித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தமிழகத்தில்ஆண்டுதோறும் விருதுநகர்கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால்கடந்த சில ஆண்டுகளாகஈரோடு மாவட்டமும்தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கி உள்ளது. மாவட்டத்தில் ஈரோடுகோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஈரோடு கல்வி மாவட்டம்எஸ்.எஸ்.எல்.சி.,யை பொறுத்தவரை, 2013ல், 95.36 சதவீதம் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம், 2014ல், 97.88 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 98.04 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. இதே போல் பிளஸ் 2 தேர்வில், 2013ல், 94.28 சதவீதம் பெற்று மாநிலத்தில் ஐந்தாவது இடம், 2014ல், 97.05சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 96.06 சதவீதம் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது.
இதுகுறித்துகல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2011, 2012ம் ஆண்டுகளில் வெறும், 93சதவீதம் தேர்ச்சியே கிடைத்தது. அதன் பின்னர் படிப்படியாக முதலிடத்தை நோக்கி வந்துள்ளது. மெல்ல கற்கும் மாணவமாணவிகளுக்கு தினமும் மாலை நேரங்களிலும்விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. ஸ்பான்சர்கள் மூலம் அனைத்து பாடங்களுக்கும் ஆன மாதிரி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போதுதிருப்புதல் பயிற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுபிளஸ் 2 தேர்வில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடத்துக்குஈரோடு மாவட்டம் தள்ளப்பட்டது.
வணிகவியல்வரலாறுஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்ததே இதற்கு காரணம். எனவேஇந்தாண்டு குறிப்பிட்ட அப்பாட பிரிவுகள் மட்டுமின்றி அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர்கள் எளிதில் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பாடங்களை நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டுபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அலுவலர்கள் கூறினர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.

Tuesday, December 15, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.
இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள்விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.இந்நிலையில், மாணவர்களுக்குப் பாடங்கள் முடிக்காத நிலையில் உள்ளதால், பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்சபாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்